ஜார்க்கண்ட்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அம்மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக ஆலம்கிர் ஆலம் பதவி வகிக்கிறார். கிராமப்புற வளர்ச்சித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் பணமோசடி நடந்ததாக புகார் எழுந்ததுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் அம்மாநிலத்தின் காண்டே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த இரண்டு கால்நடை மருத்துவர்கள் உட்பட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஞ்சி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்பட கிட்டத்தட்ட 28 கட்சிகள் ‘இண்டியா’ கூட்டணி என்ற பெயரில் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் சார்பில் கூட்டு பிரசாரமும் நடந்து வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஞாயிற்றுகிழமை ‘இண்டியா’ கூட்டணியின் பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி, நிலக்கரி சுரங்க முறைகேடு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.